முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேராசிரியை நிர்மலா தேவிக்கு 5-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

வியாழக்கிழமை, 21 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியை வரும் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க விருதுநகா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டார். விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியை நிர்மலாதேவி. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையின் பேரில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலா தேவியை விருதுநகா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற எண் 2 -ல் போலீஸார் ஆஜா்படுத்தினா். விசாரணையின் அடிப்படையில் நிர்மலா தேவியை வரும் 5-ம் தேதி மீண்டும் ஆஜா்படுத்த நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டார். இதையடுத்து நிர்மலாதேவி போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து