முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 21 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் தாக்கம்... சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பகல் நேரங்களில் சாலையில் செல்ல மக்கள் மிகவும் பயந்து வருகின்றனர். வெளியில் செல்லும் பெண்கள் கையில் குடையை பிடித்துக் கொண்டும், துணியை முகத்தில் கட்டிக் கொண்டும் சென்று வருகின்றனர். வெப்பசலனத்தால்.... இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சின்னக்கல்லாரில் 5 செ.மீ., வால்பாறையில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தென்மேற்கு திசையில் இருந்து 35 – 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். கடல் அலைகள் 3.5மீ., – 3.7 மீ., வரை கடல் அலைகள் எழும்பக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து