முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விசாரணை நடத்த ஐ.நா. குழுவை அனுமதிக்க தயார்: பாக்.

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

ஜம்மு: ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விசாரணை நடத்த ஐ.நா. குழுவை அனுமதிக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைமை ஆணையரால் அண்மையில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆகியவற்றில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், இதுகுறித்து சுதந்திரமான மற்றும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அந்த அறிக்கையை உள்நோக்கம் கொண்டது என்றும், பொய்கள் நிரம்பியது என்றும் இந்தியா விமர்சித்திருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தியாளர் முகமது பைசல், சுதந்திரமான மற்றும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைமை ஆணையர் பரிந்துரை செய்திருப்பதை வரவேற்பதாக கூறினார். மேலும் ஜம்மு - காஷ்மீரில் விசாரணை நடத்த ஐ.நா. குழுவை இந்தியா அனுமதிக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் விசாரணை நடத்த ஐ.நா. குழுவுக்கு ஏற்பாடுகள் செய்து தர எங்கள் நாடு தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து