முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோட்டில் கிடந்த 2 பவுன் தங்கசங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 90 வயது முதியவருக்கு போலீசார் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-கள்ளிக்குடி அருகே ரோட்டில் கிடந்த 2பவுன் தங்க சங்கிலியை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த 92வயது முதியவரை கள்ளிக்குடி போலீசார் வெகுவாக பாராட்டினார்கள்.
கள்ளிக்குடி அருகேயுள்ள கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(90) மதுரை தீயணைப்பு நிலையத்தில் வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர் தனது மனைவி சரோமணி மற்றும் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார்.நேற்று முன்தினம் மாலை முதியவர் ராஜமாணிக்கம் தனது வீட்டிலிருந்து அங்குள்ள கடைக்கு நடந்து சென்றுள்ளார்.அப்போது ரோட்டில் தங்க சங்கிலியொன்று கிடந்துள்ளது.இதனை எடுத்த முதியவர் ராஜமாணிக்கம் அதனை கள்ளிக்குடி காவல் நிலையத்தில் பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.2பவுன் எடையுள்ள அந்த தங்க சங்கிலியை காவல் நிலையத்தில் நேர்மையுடன் ஒப்படைத்த 90வயது முதியவர் ராஜமாணிக்கத்தை கள்ளிக்குடி காவல் நிலைய போலீசார் வெகுவாக பாராட்டினார்கள்.மேலும் அந்த தங்க சங்கிலி யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து