முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லல்லுவுக்கு வரும் 3-ம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு

சனிக்கிழமை, 23 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லல்லு பிரசாத்துக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ஜார்கண்ட் ஐகோர்ட் வரும் 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

முன்னதாக, லல்லுவின் உடல் நிலை மற்றும் பெற வேண்டிய மருத்துவச் சிகிச்சைகளின் அடிப்படையில் அவருக்கு கடந்த மே 11-ம் தேதி, ஒன்றரை மாதம் ஜாமீன் அளிக்கப்பட்டது. இந்த ஜாமீன் வரும் 27-ம் தேதி நிறைவடைய இருப்பதை அடுத்து, ஜாமீன் நீட்டிப்பு கோரி அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜூலை 3-ம் தேதி வரை லாலுவின் ஜாமீனை நீட்டித்தார்.

பல கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான 3 வழக்குகளில் லல்லு குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, அவர் கடந்த டிசம்பர் 23-ம் தேதி முதல் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக ராஞ்சி ரிம்ஸ் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட லல்லு, சில தினங்களுக்கு முன்பு, அங்கிருந்து மீண்டும் ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதையடுத்து, தான் சிறப்பு சிகிச்சை பெற 3 மாத காலம் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லல்லு சார்பில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அவருக்கு ஒன்றரை மாதம் மட்டுமே ஜாமீன் கிடைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து