எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம்: சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலத்தை தானாக முன்வந்து வழங்கியுள்ளனர் என்றும், தேவையான அளவிற்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில் இருந்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றார். சேலம் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு சேலம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-
கேள்வி: தொடர்ந்து கர்நாடக அரசு முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது, ஆணையத்திற்கான உறுப்பினரை நியமிக்கவில்லையே?
பதில்: ஏற்கனவே, உச்சநீதிமன்றத்தால் தெளிவாக தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலே, மத்திய அரசால், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு இரண்டும் அமைக்கப்பட்டு அதற்குத் தேவையான உறுப்பினர்களை நான்கு மாநிலமும் வழங்க வேண்டுமென்று தகவல் கொடுக்கப்பட்டு, அதனடிப்படையிலே, தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி அரசுகள் தங்களுடைய பிரதிநிதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளன. ஆனால், கர்நாடக மாநில அரசு மட்டும் அவர்களுடைய பிரதிநிதிகளை பரிந்துரைக்காத காரணத்தினால், மத்திய அரசு, தானாக, கர்நாடகத்திற்கான பிரதிநிதிகளை நியமித்திருக்கிறது.
கேள்வி: தொடர்ந்து நமக்குக் கிடைக்கக் கூடிய தண்ணீர் இந்த மாதம் வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றதா?
பதில்: ஒவ்வொரு மாதமும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு 10 நாட்களுக்கு ஒரு முறை அதைக் கணக்கிட்டு, நமக்கு வழங்க வேண்டிய நீரை வழங்குவதற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொள்ளும். அதை ஆணையம் மேற்பார்வையிட்டு நடைமுறைப்படுத்தும்.
கேள்வி: பசுமை வழிச் சாலை திட்டத்திற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலை மாறி, இன்றைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறதே?
பதில்: சுமார் 56 கிலோ மீட்டருக்கு தருமபுரியில் எல்லைக் கல் நடப்பட்டு விட்டது. சேலத்தைப் பொறுத்தவரை 30 கிலோ மீட்டருக்கு எல்லைக் கல் நடப்பட்டு விட்டது, இன்னும் 6 கிலோ மீட்டர் மட்டும் நடப்பட வேண்டியிருக்கிறது. இதில், 100-க்கு 4 அல்லது 5 விவசாயிகள் தங்களுடைய நிலத்தைக் கொடுக்க மறுக்கின்றார்கள். பெரும்பாலான விவசாயிகள் தங்களுடைய நிலங்களை பசுமை வழிச் சாலை அமைப்பதற்கு தானாக முன்வந்து வழங்கியிருக்கின்றார்கள். இந்த பசுமை வழிச் சாலை மிக முக்கியமான சாலை, உங்களுக்கே நன்றாகத் தெரியும். 2006-ம் ஆண்டு என்று கருதுகின்றேன், கிருஷ்ணகிரியில் இருக்கின்ற தேசிய நெடுஞ்சாலை பெங்களூரிலிருந்து சேலம் வழியாக மதுரை, திருச்சி செல்கின்ற சாலை, அதே போல, உளுந்தூர்பேட்டை சாலை இரண்டும் கிட்டத்தட்ட 2006-ல் அமைக்கப்பட்டது. 2009-லிருந்து 2011 வரை உளுந்தூர்பேட்டை சாலை அமைக்கப்பட்டது. தமிழகத்தில் அப்பொழுது வாகனங்களுடைய எண்ணிக்கை ஒரு கோடியே 7 இலட்சம். தற்போது வாகனங்களுடைய எண்ணிக்கை 2 கோடியே 57 லட்சம். எந்தளவிற்கு உயர்ந்திருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். அதற்கேற்றவாறு சாலைகளை உருவாக்குவது அரசினுடைய கடமையாகும். அதற்கு மத்திய அரசாங்கம் இப்பொழுது முன்வந்து, இந்த பசுமை வழிச்சாலையை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது, அதற்கு மாநில அரசும் உதவி செய்கிறது.
கேள்வி: இழப்பீட்டைப் பொறுத்தவரை இன்னும் கொஞ்சம்...?
பதில்: ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவர் வாயிலாக, தங்கள் பகுதியில் எவ்வளவு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம்கூட பத்திரிகையிலும், ஊடகத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
கேள்வி: அரசியல் கட்சிகள் மறியல் செய்தால், அன்றைக்கு மாலையே வெளியில் விடப்படும் சூழ்நிலை மாறி அவர்கள் மீது வழக்கு பதியக்கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளதே?
பதில்: இதுவரைக்கும் யாரும் வழக்கு பதிவு செய்யவில்லை. இன்றைக்கும் பெரும்பாலான இடங்களில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடைபெற்றது, யாரும் கைது செய்யப்படவில்லை. சட்டத்திற்கு புறம்பாக அவர்கள் நடந்து கொள்கின்ற பொழுதுதான் கைது செய்யவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படுகின்றது. இன்றைக்கு நாமக்கல்லை பற்றி குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றீர்கள். கவர்னர் அங்கே வருகின்ற பொழுது அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் கருப்புக் கொடி காட்டுவதைத் தவிர்த்து, வேறு இடத்திலே, சட்டம்-ஒழுங்கை சீர்படுத்துகின்ற விதத்திலே காட்ட முற்பட்ட காரணத்தினால்தான் தவிர்க்க முடியாத சூழ்நிலை அவர்களை கைது செய்ய வேண்டி வந்தது.
கேள்வி: குறிப்பாக, கவர்னர் வருவது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று எல்லோரும் சொல்கிறார்களே?
பதில்: இது ஒரு ஆக்கப்பூர்வமான திட்டம், இதை யாரும் வரக்கூடாது என்று ஜனநாயக நாட்டில் சொல்ல முடியாது, வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கு வருகை புரிவது தவறல்ல.
கேள்வி: விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பது பற்றி.....
பதில்: ஏற்கனவே நிலம் எடுக்கப்பட்டிருக்கிறது, இப்பொழுது நாங்கள்வந்து எடுக்கவில்லை, ஏற்கனவே, முந்தைய காலத்திலேயிருந்து நிலம் எடுக்கப்படுகின்ற சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு வளர்ந்து வருகின்ற ஒரு சூழ்நிலை. இன்னும் தொழிற்சாலை அதிகமாக வரவேண்டும். படித்த, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும். பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டுமென்று சொன்னால், அந்தப் பகுதியிலே தொழில் வளர்ச்சி சிறக்க வேண்டும், அந்தத் தொழிற்சாலைகள் நம்முடைய பகுதியில் வருவதற்கு இன்றைக்கு மிகுந்த வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால் இந்த விமான நிலைய விரிவாக்கம் தவிர்க்க முடியாத சூழ்நிலை இருக்கிறது.
கேள்வி: இது தொடர்பாக ஒரு கருத்துகூட கேட்கவில்லை என்ற ஒரு கேள்வி இருக்கிறதே?
பதில்: இதுவரை 20 முறை கருத்துக் கேட்புக் கூட்டம் கூடியிருக்கிறது, 1200 பேருக்கு மேல், இந்தக் கூட்டங்களில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். நம்முடைய சேலம் மாவட்டத்தில் 20 முறை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது, ஆங்காங்கே தாலுகா அளவில் நடத்தியிருக்கிறார்கள்.
கேள்வி: நில மதிப்பீடு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறதா?
பதில்: இதுவரை இல்லாத வகையில் ஏழைகளுக்கு அதிகமான நில இழப்பீடு வழங்கப்படும். கடந்த காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது. அப்பொழுதெல்லாம் நில இழப்பீட்டுத் தொகை குறைவாகத்தான் கொடுத்தார்கள். இன்றைக்கு அப்படியல்ல, ஏற்கனவே நம்முடைய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பலன் கொடுக்கின்ற மரங்களுக்கு என்னென்ன வகையிலே இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்ற ஒரு அறிக்கை தந்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, வீடுகளுக்கும், அதேபோல ஓட்டு வீடுகளுக்கும், தேய்மானம் இல்லாமல், கடந்த காலத்தில் தேய்மானங்களை கணக்கிட்டுத்தான் இழப்பீட்டுத் தொகை வழங்கினார்கள். அதையெல்லாம் தவிர்த்து, தேவையான அளவிற்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு உண்டான நடவடிக்கையை அரசு எடுக்கும். அதுமட்டுமல்லாமல், பசுமை வழிச்சாலை அமைக்கின்றபொழுது, கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள், இழந்தால், அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு தேவையான இடத்தைக் கொடுத்து, பசுமை வீடுகள் அவர்களுக்கு அரசு கட்டிக் கொடுக்கின்றது.
கேள்வி: இரும்பாலையை தனியார் மயமாக்கத்திற்கு அனுமதிக்க மாட்டேன் என்று சொல்கிறார்களே?
பதில்: இது மத்திய அரசாங்கத்தின் கீழ் வருகிறது. நம்முடைய ஸ்டீல் பிளாண்ட் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏற்கனவே, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திலே, இதை தனியார் மயம் ஆக்கக்கூடாதென்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும், பாரதப் பிரதமருக்கும், மத்திய அரசினுடைய துறை அமைச்சர்களுக்கும் கடிதம் மூலமாக, இதை தனியார் மயமாக ஆக்கக்கூடாதென்ற, தமிழக மக்களுடைய உணர்வை பிரதிபலிக்கின்ற விதத்திலே கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்திலும், இதை வலியுறுத்தி பேசப்பட்டிருக்கின்றது.
கேள்வி: தொடர்ந்து எம்.பி.க்கள் பேசுவார்களா?
பதில்: ஏற்கனவே பேசப்பட்டது, பேசிக் கொண்டிருக்கிறார்கள், இன்னும் பேசுவார்கள்.
கேள்வி: குறிப்பாக 18 எம்.எல்.ஏ-க்கள் தீர்ப்பு மிகவும் விமர்சிக்கப்படுகிறதே?
பதில்: தீர்ப்பை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. நீதிமன்றம் என்பது பொதுவானது. ஆகவே, அந்த நீதிமன்றத்தை விமர்சிப்பதை அனைவரும் தவிர்க்கவேண்டும்.
கேள்வி: எந்த மாதிரியான நடவடிக்கை இருக்கும்?
பதில்: நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் பொழுது, இதைப்பற்றி பேசுவது முறையாக இல்லை.
கேள்வி: நீதிமன்ற தீர்ப்பு வந்த பொழுது அதை விமர்சிப்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிபதி குற்றம் சாட்டியிருக்கிறாரே?
பதில்: நேற்றையதினம்கூட, தலைமை நீதிபதி அவர்களே தன்னுடைய கருத்தை தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்
20 Apr 2024புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு