முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நாளிதழ் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்காவில் நாளிதழ் நிறுவனம் ஒன்றிற்குள் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம், அன்னபோலிஸ் என்ற நகரில் 4 அடுக்கு அலுவலக கட்டிடம் ஒன்றில் பழமையான கேபிட்டல் கெஜெட் என்ற நாளிதழ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் திடீரென அங்கிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு மர்ம நபரை தேடி வருகின்றனர். இதில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் போலீசார்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து