முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லாந்தில் வரும் 16-ம் தேதி அதிபர் டிரம்ப் - புடின் சந்திப்பு

சனிக்கிழமை, 30 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் வரும் 16-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் சந்தித்துப் பேசுகின்றனர்.

உக்ரைன், சிரியா விவகாரங்களால் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

இந்த பின்னணியில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், ரஷ்ய அதிபர் புடினை மாஸ்கோவில் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் வரும் 16-ம் தேதி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: டிரம்ப், புடின் சந்திப்பால் இருநாடுகளிடையே நிலவும் பதற்றம் குறையும் என்று எதிர்பார்க்கிறோம். அமெரிக்காவின் நலனை கருத்திற்கொண்டு ரஷ்ய அதிபர் புடினைச் சந்திக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இந்த சந்திப்பின் போது நட்புறவை மேம்படுத்த ரஷ்யா தயாராக உள்ளதா என்பதை கண்டறிய முடியும். அமெரிக்காவின் நலன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் மேற்கொள்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து