முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடலில் பயோ சிப் பொருத்தி அலையும் சுவீடன் மக்கள்!

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

ஸ்டாஹொம் : சுவீடன் நாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் மொத்தம் 3500 பேர், தங்கள் கைகளில் பயோ சிப் பொருத்தி இருக்கிறார்கள்.

பயோ சிப் எனப்படும் சிம் கார்ட் போன்ற சிப்பை மனித உடலில் எங்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம். ஒரு முறை பொருத்திவிட்டால் சார்ஜ் ஏற்றவேண்டிய அவசியமே கிடையாது. இதை பல விதமான பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நிலையில் உலகிலேயே அதிக பேர் ஸ்வீடன் நாட்டில்தான் பயோ சிப்புடன் வலம் வருகிறார்கள். அந்த நாட்டில் பயோ சிப் பொருத்துவது கட்டாயப்படுத்தப்படவில்லை என்றாலும், பல மக்கள் தானாக முன் வந்து பயோ சிப் பொருத்திக் கொள்கிறார்கள்.

சுவீடனில் செயல்படும் அமெரிக்க நிறுவனம் ஒன்று,தங்கள் பணியாளர்கள் எல்லோரும், கைகளில் பயோ சிப் பொருத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அதன்படி எல்லோரும் பயோ சிப் பொருத்தினார்கள்.

இந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களில் மட்டும் சுவீடன் நாட்டில் 3500 பேர் சிப் பொருத்தியுள்ளனர். தங்கள் கைகளில்,கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் பயோ சிப்பை பொருத்தியுள்ளனர். இதற்காக மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து