எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம் - ராமேஸ்வரத்தில் தனியார் தங்கு விடுதியில் கடல் மீன்வளம் – இந்தியாவில் கடல் மீன்வளர்ப்பு” என்ற பொருளிலான மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு அமர்வுகளுக்கு இடையிலான கூட்டம் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் மீன்வளர்ப்பு மற்றும் விவசாயத்தை மேம்பாடுத்துவதற்காக துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசணை கூட்டம் ராமேசுவரம் பகுதியிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு கலந்துகொண்டு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஆலோசணை வழங்கு வதற்காக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் நேற்றுக்கு முன்தினம் ராமேசுவரம் வருகை தந்தார்.பின்னர் ராமேசுவரம் பகுதியிலுள்ள அப்துல்கலாம் சமாதிக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.பின்னர் கலாம் வீட்டிற்கு சென்று அப்துல்கலாம் அண்ணன் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் மற்றும் பேரன் சேக்சலீம் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார்.பின்னர் மத்திய அரசின் நான்காம் ஆண்டு சாதனை மலரை கொடுத்தார்.தொடர்ந்து நேற்று காலையில் ராமநாதசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.முன்னதாக அமைச்சரை பா.ஜ.கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன்,ராமேசுவரம் நகர் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர்கள் வரவேற்றேனர்.பின்னர் தனுஸ்கோடி பகுதிக்கு சென்று புயழில் அழிந்துபோன பழைமையான கட்டிடங்களை பார்வையிட்டார்.அதன் பின்னர் தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற ஆலோசணை கூட்டத்திற்கு வருகை தந்தார்.அங்கு ராமநாதுபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் வரவேற்றார்.அதன் பின்னர் அங்கு மத்திய அமைச்சர் கூட்டத்திற்கு தலைமை ஏற்று மீன்வளம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசணை நடத்தினர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் தெரிவித்தது:
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை கடல் மீன்வளம் 2017 தேசியக் கொள்கையை அறிவிக்கை செய்துள்ளது. இந்தக் கொள்கை அடுத்த பத்தாண்டுகளுக்கான கடல் மீன்வள மேம்பாட்டை நெறிப்படுத்தும். பாரம்பரிய மீனவர்கள், அவர்களது சங்கங்கள் / அமைப்புகள் அல்லது சுயஉதவிக் குழுக்கள், மீன்பிடிப் படகு விலையில் 50 சதவீதத்தை மத்திய நிதியுதவியாக பெறுவார்கள். அதாவது, ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு ரூ. 40 லட்சம் பெறுவார்கள். கடற்கரையோரம் 200 மீ்ட்டர் ஆழமான மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மீன்வளங்கள் ஓரளவு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அல்லது மிக அதிகமாக மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இந்த நிலைமை பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகுந்த கவலையளிக்கும் விஷயமாகும். நீலப் புரட்சி திட்டத்தின்கீழ், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உதவி என்கிற புதிய துணைப்பகுதி இணைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இத்திட்டத்தின்படி, பாரம்பரிய மீனவர்கள், அவர்களது சங்கங்கள் / அமைப்புகள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் ஆகியன மீன்பிடி படகுகளின் விலையில் 50 சதவீத மத்திய நிதியுதவியை பெறுவார்கள். இத்திட்டத்தின் அமலாக்கத்திற்காக முதல் ஆண்டுக்கு 2017-18, மத்தியப் பங்காக ரூ. 312 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பாரம்பரிய மீனவர்கள் பயனடைவார்கள். இந்தியாவின் மீன் உற்பத்தி 1.14 கோடி டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். இதில் 68 சதவீதம் உள்நாட்டு மீன்வளத் துறைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 32 சதவீதம் கடல்பகுதிகளிலிருந்து கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2020-ஆம் ஆண்டில் உள்நாட்டு மீன் தேவை 1.5 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மீன்உற்பத்தி 1.14 கோடி டன்னாக மட்டுமே இருக்கும். இரண்டுக்கும் இடையேயுள்ள 0.36 கோடி டன் உள்நாட்டு மீன்வளர்ப்பு மற்றும் கடல் மீன்வளர்ப்பு ஆகியவற்றால் ஈடு செய்யப்படும்.கரையோரப் பகுதிகளில் 200 மீட்டர் ஆழத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மீன் வள ஆதாரங்கள் ஓரளவு பயன்படுத்தப்பட்டுள்ளன அல்லது சில நேரம் மிக அதிகமாக மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். இந்த நிலைமை பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகுந்த கவலை அளிக்கும் விஷயம் என்று அமைச்சர் கூறினார். இது தொடர்பாக 2018 மே 17ஆம் தேதி, அனைத்துக் கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் மீன்வளத்துறை அமைச்சர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கடல் மீன்பிடிப்பு பற்றிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பொறுப்பான மற்றும் நிலைத்திருக்கக்கூடிய மீன்வள சீர்திருத்தங்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து கடலோர மாநிலங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டன.
கரையோரப் பகுதிகளில் கூடுதல் மீன்உற்பத்திக்கு மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளன என்பதை கருத்தில் கொண்டு, அரசு கடல் மீன் வளர்ப்பை மேம்படுத்த முடிவு செய்தது. இதன் அடிப்படையில், நீலப் புரட்சி திட்டத்தின்கீழ், கடல் மீன்வளர்ப்பு துணைப் பகுதியையும் இணைத்தது. திறந்த கடல் கூண்டு மீன்பிடிப்பு மீன் பண்ணைத் தொழிலில் சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒரு நடவடிக்கை ஆகும். கடல் அலைகள் குறைவாக உள்ள திறந்த கடல் பகுதிகளில் இந்த முறை கையாளப்படுகிறது. கூண்டுகளில் வளர்க்கப்படும் மீன்கள் விலை மதிப்புமிக்கவை ஆகும். இதனால், கூண்டுகளில் வளர்க்கப்பட்ட மீன்களுக்கு அதிகமான ஏற்றுமதி தேவைகள் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த ஆலோசணை கூட்டத்தில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், கிருஷ்ணாராஜ், பர்ஷோத்தம் ருபாலா, மத்திய இணை அமைச்சர் பென்.ராதகிருஷ்ணன்,நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன்லால் மேஹ்வால், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.