முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதாவுக்கு ஜாமீன் தடை நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீன் மீதான தடையை நீட்டித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக, கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி கூட்டணி கடந்த 2015-ம் ஆண்டு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது நடத்தப்பட்ட வன்முறை, தீவைப்புச் சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, கலீதா மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கோமில்லா மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் கலீதாவுக்கு 6 மாத ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அந்த ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், இதுதொடர்பான மனுவை விசாரித்த 4 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அந்தத் தடையை உறுதி செய்தது. மேலும், கலீதா ஜாமீன் குறித்த வழக்கை நான்கு வாரங்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கெனவே, அறக்கட்டளை ஊழல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து