முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

27-ம் தேதி சந்திர கிரகணம்: திருப்பதி கோவில் நடை 12 மணிநேரம் மூடப்படும்

புதன்கிழமை, 4 ஜூலை 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி : சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 27-ம் தேதியன்று, திருப்பதி கோவில் நடை 12 மணிநேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தர்கள் அனுமதி

வரும் 27-ம் தேதி இரவு 11.54 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.49 மணிவரை முழுசந்திர கிரகணம் நிகழ உள்ளது. வழக்கமாக கிரகண காலங்களில் கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன் திருப்பதி கோவில் மூடப்படுவது வழக்கம். அதன்படி 27-ம் தேதி மாலை 5 மணிக்கு திருப்பதி கோவில் நடை சாத்தப்பட உள்ளது. 28-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுத்தி, புண்யாவசனம் செய்த பின் சுப்ரபாத சேவை நடைபெறும். அன்று காலை 7 மணிமுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சேவைகள் ரத்து

இதையொட்டி 27-ம் தேதி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும் அன்றைய தினம் இரவு பவுர்ணமி கருட சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூலை 28-ம் தேதி அதிகாலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கொலு, பஞ்சாங்கம் படித்தல் உள்ளிட்டவை ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து