முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. யில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது: அகிலேஷ்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ: சிறையில் தாதா முன்னா பஜ்ரங்கி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தற்போதைய அரசாங்கத்தின்கீழ் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, இன்றுள்ள உத்தரப் பிரதேச அரசாங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளது. பீதியை ஏற்படுத்தும் சூழ்நிலைதான் உள்ளது. சிறைக்குச் செல்லும் குற்றவாளிகள் அங்கு யாராவது நம்மைக் கொல்லக் கூடும் என்ற எண்ணம் உருவாகி விட்டது. இது அரசாங்கத்தின் தோல்வி. மாநில மக்கள் மிகவும் பயந்து போய் உள்ளனர். மாநிலத்தில் இதற்கு முன்புவரை இத்தகைய தவறான மற்றும் குழப்பமான ஒரு நிலை இருந்ததில்லை. இவ்வாறு அகிலேஷ் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து