முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - ருவாண்டா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

புதன்கிழமை, 11 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, இந்தியா, ருவாண்டா நாடாளுமன்றங்களுக்கு இடையே பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவும், ருவாண்டா நாடாளுமன்ற மேலவையின் தலைவர் பெர்னாட் மகுஸாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதுபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முதல் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.  ருவாண்டா நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பெர்னாட் மகுஸா தலைமையிலான அந்நாட்டு எம்.பி.க்கள் குழு, 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளது. மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவை இந்த குழுவினர்  சந்தித்தனர். அப்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.

பின்னர், இரு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கு இடையே பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெங்கையா நாயுடுவும், பெர்னாட் மகுஸாவும் கையெழுத்திட்டனர். நாடாளுமன்ற அளவிலான ஒத்துழைப்பு மட்டுமன்றி, பிராந்திய, சர்வதேச விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து