முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ள நீரில் மூழ்கும் மும்பை - குப்பையில் புதையும் டெல்லி: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதன்கிழமை, 11 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, தலைநகர் டெல்லி குப்பையில் புதைந்து கொண்டு வருகிறது, மும்பையோ வெள்ள நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. அரசுகள் என்னதான் செய்து கொண்டிருக்கின்றன என்று சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவது தொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளுக்கு அடியில் டெல்லி புதைந்து கொண்டிருக்கிறது. அதேபோல் மும்பை நகரம் மழை நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அரசாங்கங்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் நீதிமன்றங்கள் தலையிட்டால், அதன் மீது எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என்று கருத்து தெரிவித்தனர். இந்த வழக்கில், டெல்லியில் மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவது மாநில அரசின் பொறுப்பா அல்லது மத்திய அரசின் பொறுப்பா என்பதை அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும் என்று சுப்ரீ்ம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து