முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக்கடலில் நீடிக்கும் தாழ்வுப்பகுதி வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம் அறிவிப்பு

புதன்கிழமை, 11 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : வடமேற்கு வங்கக்கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறுவதால் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக மத்திய பிரதேசம், கோவா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறை தாலுக்காவில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.  அதேநேரத்தில் வெப்பசலனம் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது திடீர் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வடமேற்கு வங்க கடலில் ஆந்திரா கடல் பகுதி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இது வரும் 13-ம் தேதி வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து