எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் திறன்பலகை மூலம் நடைபெற்று வரும் ஸ்மார்ட் வகுப்புகளை கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் பார்வையிட்டார்.
ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் பாடத்திட்டங்களை படக்காட்சிகளாக கல்வி கற்பிக்கும் ஸ்மார்ட் வகுப்பினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டமானது, மத்திய அரசு இந்திய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் ஒன்றாகும். அதன்படி மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி, வேளாண்மை மற்றும் நீர்பாசன மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதி மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மாணவ, மாணவியர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தினை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டங்களை மடிக்கணினி, புரொஜக்டர் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு எளிய முறையில் படக்காட்சிகளாக வகுப்புகள் நடத்தும் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கற்றல் முறை, தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் போதிய அடிப்படை கல்வியறிவு ஆகியவற்றை உறுதி செய்தல் போன்ற பணிகளை கண்காணித்திட வட்டாரவள ஆசிரியர் பயிற்றுநர்களை நியமித்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 123 ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளனர். அவர்களில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளின் ஆசிரியர் பயிற்றுநர் திரு.எம்.உலகநாதன் என்பவர் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் ஆலோசனையின் பேரில் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 18 அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் ஒரு பள்ளி வீதம் மடிக்கணினி, புரொஜக்டர் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்கள் உதவியுடன் பாடத்திட்டங்களை படக்காட்சிகளாக வெண்திரையில் திரையிட்டு ஸ்மார்ட் வகுப்புகளாக நடத்தி மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.
குறிப்பாக மாணவ, மாணவியர்களுக்கான பாடத்திட்டங்கள் குறித்த செயலிகளை தரவிறக்கம் செய்து படக்காட்சிகளாக திரையிடப்பட்டு செயல்முறை கற்பித்தல் மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல தமிழ்நாடு அரசின் மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கியூஆர் கோடு பாடங்களையும், எளிய முறையில் குழந்தைகளின் மனதில் பதிந்திடும் வகையில் 4டி தொழில்நுட்ப அனிமேஷன்கள் மூலமாகவும் கல்வி கற்பிக்கப்படுகிறது. இவ்வாறு நடத்தப்படும் ஸ்மார்ட் வகுப்புகள் மூலமாக எழுதி பழகுதல், வாசித்தல் போன்ற பயிற்சிகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். அந்தவகையில் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் திறன்பலகை கற்பித்தல் மூலம் நடத்தப்படும் ஸ்மார்ட் வகுப்பு பயிற்சிகளை நேரில் சென்று பார்வையிட்டார். இத்தகைய ஸ்மார்ட் வகுப்புகளில் மாணவ, மாணவியர்கள் காட்டும் ஆர்வம் குறித்து ஆசிரியர்களிடத்தில் கேட்டறிந்தார். மேலும் மாணவ, மாணவியர்களின் கல்வி கற்றலின் ஆர்வத்தினை ஊக்குவித்திடும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இத்தகைய ஸ்மார்ட் வகுப்புகளை ஏற்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களிடத்தில் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.முருகன் உடனிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.