முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படைவீரர் கொடிநாள் அதிகமாக வசூல் செய்த அலுவலர்களுக்கு விருதுநகர் கலெக்டர் சிவஞானம் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

வியாழக்கிழமை, 12 ஜூலை 2018      விருதுநகர்
Image Unavailable

   விருதுநகர்,-ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டைக்காக்கும் இராணுவ வீரர்களுக்காக கொண்டாடப்படும்; கொடிநாள் தினத்திற்காக ரூ.5 இலட்சத்திற்கு மேல் வசூல் செய்தவர்களுக்கு   ஆளுநர்   வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றும், ரூ.3 இலட்சத்திற்கு மேல் வசூல் செய்தவர்களுக்கு அரசு தலைமைச்; செயலர் அவர்களின் வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் 2015-ம் ஆண்டில் ரூ.5,25,000 - வசூல் புரிந்த கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்(ஓய்வு) திரு.ஆர்.இராஜேந்திரன்   மேதகு ஆளுநர்  வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றும் மாவட்ட அவர்கள்  வழங்கினார்கள்.
மேலும் 2015-ம் ஆண்டில் ரூ.4,20,000 - வசூல் புரிந்த இராஜபாளையம் சார்பதிவாளர்  கா.செல்லப்பாண்டி  , ரூ.3,90,000 - வசூல் புரிந்த திருவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து  அலுவலர்  .மு.சந்திரசேகரன்  , ரூ.3,58,358 - வசூல் புரிந்த அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இணை பேராசிரியர் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினெட் முனைவர்.நீ.டென்சிங் பாலையா , ரூ.3,20,000 - வசூல் புரிந்த அருப்புக்கோட்டை சார்பதிவாளர்   .க.மாரிமுத்து  , ரூ.3,20,000 - வசூல் புரிந்த விருதுநகர் சார்பதிவாளர்  .ப.துரைமகாலிங்கம்  , ரூ.3,10,000 - வசூல் புரிந்த அருப்புக்கோட்டை மோட்டார் வாகன் ஆய்வாளர்(நிலை-1)  .ஐ.நாகூர்கனி   என மொத்தம் 6 அலுவலர்களுக்கு அரசு தலைமை செயலர்   வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றுகளையும்   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,    வழங்கினார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து