முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவாஸ் ஷெரீப்பின் பேரன்களை கைது செய்தது லண்டன் போலீஸ்

வெள்ளிக்கிழமை, 13 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

லண்டன்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் நேற்று கைதான நிலையில், அவரது பேரன்களை லண்டன் காவல்துறை நேற்று மாலை கைது செய்துள்ளது.

நவாஸ் ஷெரீப்பின் பேரன்கள், தங்களது வீட்டுக்கு வெளியே ஒரு நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரை தாக்கியதாக வந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்திருப்பதாக லண்டன் காவல்துறை கூறியுள்ளது. நவாஸ் ஷெரீப்பின் மகனுக்கு சொந்தமான குடியிருப்பு லண்டனில் பார்க் லேன் பகுதியில் உள்ள அவென்பீல்ட் ஹவுஸ் பகுதியில் உள்ளது.

இந்த நிலையில், நேற்று நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக சிலர் கோஷம் எழுப்பியதாகவும், அவர்களை, நவாஸின் பேரன்கள் திட்டி, தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து லண்டன் காவல்துறை அவர்களை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து