முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 16 பேர் விடுதலை

வெள்ளிக்கிழமை, 13 ஜூலை 2018      இலங்கை
Image Unavailable

கொழும்பு: இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 16 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். 

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சமீபத்தில் சிறைபிடித்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கு இலங்கை ஊர்காவல்படை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது. அதே சமயம் விடுதலையான 16 மீனவர்களும் 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டால், விசாரணையின்றி ஒரு வருட சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் ஊர்க்காவல்படை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து