முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளில் கனமழை நிலச்சரிவில் 8 பேர் பலி

சனிக்கிழமை, 14 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

காத்மண்டு: நேபாளில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர்.

நேபாள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பெய்து வரும் மழையால், அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள பக்தாபூர் மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்கிருந்த ஒரு வீடு, நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு இடிந்து விழுந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவை அடுத்து, அப்பகுதியில் இருந்த 3,000-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து