முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்

சனிக்கிழமை, 14 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: கோவை, நெல்லை, தேனி, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவி வருவதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மத்திய பிரதேசம், கோவா, குஜராத், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது என்றும் வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த தரை காற்று வீசும் எனவும் தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து