முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

டாக்கா: வங்கதேசம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்துப் பேசினார்.

மூன்று நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஷேக் ஹசினாவை  சந்தித்தார்.

அப்போது, இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டால் தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் வேரறுக்க முடியும் என்று ஹசினாவிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து கட்டுரையில் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினாவுடனான சந்திப்பு இனிமையானதாக அமைந்தது. இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து நாங்கள் ஆலோசனை செய்தோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வங்கதேச உள்துறை அமைச்சர் அசாதுஸமான் கான் கமலை, நேற்று ராஜ்நாத்சிங் சந்தித்து பேச்சு நடத்தினார். இது இரு நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் இடையே நடைபெறவுள்ள 6-ஆவது சந்திப்பாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து