எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்: பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த திட்டங்களை அ.தி.மு.க. அரசு பலவகைகளிலும் மெருகேற்றி செயல்படுத்தி வருகிறது என்று விருதுநகரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விருதுநகரில் நடந்த காமராஜர் பிறந்த தின விழாவில் முதல்வர் எடப்பாடி மேலும் பேசியதாவது,
பசியை மட்டும் விரட்டினால் போதாது, அவர்கள் சத்தானவர்களாகவும் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் காமராஜரின் மதிய உணவு திட்டத்தினை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டமாக மாற்றினார். வெறும் சத்துணவுடன் நில்லாமல், இளைய தலைமுறையினருக்கு அனைத்து வகையான சத்துகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா, தினமும் சூடான கலவை சாதத்துடன் பயறு வகைகள் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றையும் வழங்கி பெருந்தலைவரின் திட்டத்தை மேலும் மெருகேற்றினார். இவ்வாறு பெருந்தலைவர் கொண்டு வந்த திட்டத்தை அ.தி.மு.க. அரசு பலவகைகளிலும் மெருகேற்றி செயல்படுத்தி வருகிறது. அதை தொடர்ந்து அம்மாவின் அரசு, அனைவருக்கும் தரமான கல்வியை அளிப்பதற்கு உறுதி பூண்டுள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில், 2018-19-ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், எத்தனையோ துறைகள் தமிழகத்தில் இருந்தாலும், அனைத்துத் துறைகளைக் காட்டிலும் பள்ளிக் கல்வித் துறைக்கு மிக அதிக அளவு ஒதுக்கீடாக 27ஆயிரத்து 205 கோடியே 88 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதே இதற்கு சான்றாகும்.
தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிப்பு
மிகத் தெளிவான திட்டமிடலின் காரணமாக 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெறும் தேதிகளும், இந்த வகுப்புகளுக்குரிய பொதுத் தேர்வு முடிவு அறிவிக்கப்படும் தேதிகளும் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே கொடுக்கப்பட்டதன் காரணமாக மாணவர்களின் மன அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர்களுக்கான பல திட்டங்கள் அம்மா வழியில் செயல்படும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு படிப்பிற்கு தேவையான விலையில்லா சீருடை, காலணி இடைநிற்றலை குறைத்திட சிறப்பு ஊக்கத் தொகை, விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயண அட்டை, என அனைத்தும் அம்மா வழியில் செயல்படும் அரசால் தொடர்ந்து மாணவர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு வருகின்றன.
சாதனை படைத்த அரசு
இந்தத் திட்டங்களுக்காக 2018-19-ம் ஆண்டில் ஆயிரத்து 967 கோடியே 47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா வழியில் செயல்படும் அரசால் பொதுத் தேர்வுகளில் அறிவிக்கும் தரமுறை கைவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாணாக்கர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தைக் குறைத்து மனநிம்மதியை அளித்துள்ளது. 2017-18-ம் கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 20 லட்சம் மாணவர்களுக்கு அவர்களுடைய கைபேசி மூலமாக தேர்வு முடிவுகள் வெளியான 2 நிமிடத்தில் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டு சாதனை படைத்த அரசு அம்மாவினுடைய அரசு. மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர்களின் பெயர் தமிழில் அச்சிட்டு வழங்கும் முறை மார்ச் 2017 பொதுத் தேர்வு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வாறு தமிழக கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் சிறந்த திட்டங்களில் ஒரு சிலவற்றை மற்ற மாநிலங்களில் உள்ள கல்வித் துறை, தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்தி வருகின்றன. கர்ம வீரர் காமராஜர் பள்ளிக்கல்விக்கு எவ்வாறு ஊக்கம் அளித்தார்களோ, அது போல் அம்மாவின் அரசு உயர் கல்வித்துறைக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2011-ம் ஆண்டு அம்மா ஆட்சி பொறுப்பேற்ற போது, உயர்கல்வி படித்திருந்த மாணவர்களின் சதவீதம் 21. இன்றைய தினம் தமிழகத்தில் 46.94 சதவித மாணவர்கள் உயர்கல்வி படிக்கின்றனர். இதன் காரணமாக இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கின்ற மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
காமராஜரின் கனவு நிறைவேறியது
பெருந்தலைவர் காமராஜர் கண்ட கனவு அம்மாவினுடைய அரசால் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம், அம்மா உயர் கல்விக்கு அளித்த ஊக்கமும், 65 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கியதும் தான். அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு கடந்த ஆண்டு, மேலும் 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கியுள்ளது. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கடைக்கோடியில் இருக்கின்ற ஏழை மாணவ, மாணவியரும் குறைந்த கட்டணத்தில் கல்வியறிவு பெறுவதற்காக, உயர்கல்வி படிப்பதற்காக, இன்றைக்கு 2011-லிருந்து இன்று வரைக்கும் ஆகமொத்தம் 76 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொடுத்த அரசு அம்மாவினுடைய அரசு. 1961-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பொது நூலகச் சட்டத்தை இயற்றி, 454 கிளை நூலகங்களையும், எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட மைய நூலகங்களையும் ஏற்படுத்தினார். இப்படிப்பட்ட மக்கள் திட்டங்களால் தான்.
அணைகளை கட்டிய கர்மவீரர்
காமராஜர் ஆட்சி என்னும் சொற்றொடர் இந்திய அரசியல் சொல்லகராதியில் இடம்பெற்றன. விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளித்து உணவு உற்பத்தியைப் பெருக்க ஆறுகளின் குறுக்கே பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் பல்வேறு அணைகளை கட்டப்பட்டது. பரம்பிக்குளம் - ஆழியார் திட்டம், கீழ்பவானி - நீர்த் தேக்கத் திட்டம், அமராவதி - அணைக்கட்டுத்திட்டம், சாத்தனூர் - நீர்த்தேக்கத் திட்டம், வைகை - அணைக்கட்டுத் திட்டம், மணிமுத்தாறு - உயர்மட்ட கால்வாய் திட்டம் இப்படி பல அணைகளை கட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். தற்காலம் அறிவியல் காலம். இதற்கு அடிப்படை தேவை மின்சக்திதான்.
இந்த மின்சக்தியை பெருக்காமல் தொழில் வளர்ச்சிகாண முடியாது என்பதை நன்கு அறிந்து பல மின் திட்டங்களை பெருந்தலைவர் செயல்படுத்தினார். அதே போல், அம்மா 2011-ல் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்ற போது ஒரு நாளைக்கு 10 மணி நேரம், 15 மணி நேரம் மின்தடை இருந்தது. இன்னும் 3 ஆண்டுகளில் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று அம்மா சூளுரைத்தார், சொன்னதை நிறைவேற்றினார். அம்மா அவர்கள் வழியில் இன்றும் ஆளுகின்ற நம்முடைய அரசால் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக திகழ்கிறது.
காமராஜர்.ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் தொழில் புரட்சி ஏற்பட்டது. அதேபோல் அம்மா முதலீட்டாளார்களை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தினார். அம்மாவின் வழியில் வரும் 2019-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அம்மா அரசால் மீண்டும் நடத்தப்படவுள்ளது.
பெருந்தலைவரின் அத்தனை பண்பு நலன்களையும் கைக்கொள்ள முடியாவிட்டாலும், அவற்றில் ஒரு சிலவற்றையாவது இன்று அரசியலுக்கு வர விரும்புவோர் பின்பற்ற வேண்டும் என்பதே அவரது வாழ்க்கை நமக்கு சுட்டிக் காட்டுகின்ற உண்மையாகும். சென்னையில் உள்ள கர்மவீரர் காமராசர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக 21.6.1978 முதல் தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது. இதற்கான உத்தரவினை அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறப்பித்தார். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.