முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் தலைமை அலுவலகத்தில் பாலகம் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய தலைமை அலுவலகத்தில் புதிய நவீன ஆவின் சிறுவர் பூங்கா பாலக திறப்பு விழா நடைபெற்றது.
நவீன ஆவின் சிறுவர் பூங்கா பாலகத்தை ஒன்றிய பொது மேலாளர் முகமது பரூக், பிரிவு மேலாளர்கள் நிரூபன் சக்கரவர்த்தி, மணிமாறன், வெங்கடேசன், குழந்தைவேலு மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பால்வள துணைப்பதிவாளர் செல்வம் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை திறந்து வைத்தார். பொது மேலாளர் மற்றும்இதர ஒன்றிய பணியாளர்கள் அனைவரும் குத்துவிளக்கேற்றினர். சிறுர் ஆவின் பங்கா பாலகத்தில் ஆவின் நிறுவனத் தயாரிப்பான அனைத்து பால் மற்றும் உபபொருள்களான நெய், வெண்ணெய், பாதாம் பவுடர், நறுமணப்பால், பால்கோவா மற்றும் ஆவின் ஐஸ்கிரீம்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விற்பனை செய்யப்படும்.
சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களான ஊஞ்சல், சறுக்கல், சீசா மற்றும் பெரியவர்கள் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் கிரானைட் கல் இருக்கைகள் கட்டணமில்லா சலுகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆவின் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து