எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்களின் எண்ணம் தூள்தூளாகி விட்டது. தினகரனைப் போல் எத்தனை பேர் திரண்டு வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று மதுரையில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி துவக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.
மாபெரும் சைக்கிள் பேரணி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று மாலையில் மாநில ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணியை அவர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாடு செய்திருந்தார். கடந்த சில நாட்களாக அவர் சைக்கிள் பேரணிக்கான முன்னோட்ட நிகழ்ச்சிகளை ஆய்வு செய்தார். பின்னர் இந்த நிகழ்ச்சி நேற்று திட்டமிட்டபடி நடைபெற்றது. சைக்கிள் பேரணி துவக்க விழா மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு அருகே உள்ள அம்மா திடலில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார். முன்னதாக இந்த விழாவில் அவர் பேசியதாவது,
மாநில அம்மா பேரவை சார்பில் நடைபெறும் இந்த சைக்கிள் பேரணி வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெறும் ஒரு பிரச்சார நிகழ்ச்சியாகவே அமைந்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கான முன்னோடி பிரச்சாரமாகவே இதை நான் கருதுகிறேன். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் ஒரு நிகழ்ச்சியாகவே இது அமையும். நம்மைப் பொறுத்தவரை நாம் பிரச்சாரத்தை துவக்கி விட்டோம். மதுரையில் எதைத் தொடங்கினாலும் அது வெற்றி பெறும். கடந்த ஓராண்டு காலமாக அம்மா விட்டுச் சென்ற பணிகளை நாம் நிறைவேற்றி வருகிறோம்.
அசைக்க முடியாது
அப்படிப்பட்ட இந்த அம்மாவின் அரசை சிலர் கவிழ்க்க நினைத்தார்கள். கட்சியையும் கலைக்கப் பார்த்தார்கள். ஆனால் அவர்களது எண்ணம் தூள் தூளாகி விட்டது. நமது கட்சி ஒரு பெரிய இயக்கம். தொண்டர்களின் முழு ஒத்துழைப்போடு நமது கட்சி வலிமையாக உள்ளது. நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் நம்மை யாரும் அசைக்க முடியாது. ஆனால் சிலர் இந்த அரசை கவிழ்த்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். டி.டி.வி. தினகரன் இந்த கட்சிக்காக எந்த தியாகம் செய்தார். தினகரனுக்கும் இந்த கட்சிக்கும் என்ன சம்பந்தம். நான் 42 ஆண்டு காலமாக இந்த கட்சிக்காக உழைத்து கொண்டிருக்கிறேன். இங்கே இருப்பவர்களும் அப்படித்தான். ஆனால் கட்சிக்காக நீ(தினகரன்) என்ன பாடுபட்டாய்? கட்சிக்காக சிறை சென்றாயா? இந்த ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் உனது கனவு ஒருநாளும் பலிக்காது.
தினகரன் ஒரு துரோகி
தினகரனைப் போல் எத்தனை பேர் திரண்டு வந்தாலும் இந்த ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது. கொல்லைப்புற வழியாக வந்தவர் டி.டி.வி. தினகரன். தி.மு.க. வை ஒரு தீய சக்தி என்று சொன்னவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவரது கனவை நனவாக்கி தன்னையே அர்ப்பணித்தவர் அம்மா. அவரது வழியில் செயல்படும் இந்த அரசை கவிழ்க்க நினைப்பவர்களை தொண்டர்கள் மன்னிப்பார்களா? மக்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள். ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் தினகரன் ஒரு துரோகி. அவரை மக்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள்.
42 ஆண்டு காலம் நிலவிய காவிரி பிரச்சினைக்கு இந்த ஆட்சியில் தீர்வை ஏற்படுத்தி இருக்கிறோம். கடந்த மாதம் கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்டோம். ஆனால் தர மறுத்தார்கள். ஆனால் இப்போது நிலைமை என்ன. அவர்களாலேயே அங்குள்ள அணைகளில் நீரை தேக்கி வைக்க முடியவில்லை. நாம் கேட்காமலேயே இப்போது நமக்கு தண்ணீர் கிடைக்கிறது. தமிழக அணைகள் எல்லாம் மழையால் நிரம்பி வருகின்றன. மேட்டூர் அணை நீர்மட்டம் விரைவில் 120 அடியை எட்டும். இதுவே நமது வெற்றிக்கு அறிகுறி. அனைத்து அணைகளும் இயற்கையாகவே நிரம்புகின்றன. இதுவே நமது வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே இந்த சைக்கிள் பேரணி வெற்றிக்கான ஒரு முன்னோடி பேரணி. இந்த பேரணி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
நமது ஒருங்கிணைப்பாளர் (ஓ.பி.எஸ்.) சொன்னதைப் போல பேரணியில் செல்பவர்கள் மிகுந்த கவனத்தோடு செல்ல வேண்டும். உங்கள் பிரச்சாரம் எதிர்காலத்தில் நமது வெற்றிக்கு வழிவகுக்கும். நாளை நமதே. நாற்பதும் நமதே. இவ்வாறு முதல்வர் பேசினார்.
முன்னதாக அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா செய்த சாதனைகளை பட்டியலிட்டார். முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தது போன்ற பல்வேறு சாதனைகளை முதல்வர் பட்டியலிட்டு பேசினார். பின்னர் விழா முடிந்ததும் அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
பறவைக் காய்ச்சல், அம்மை நோய் பாதிப்புகள்: அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு
23 Apr 2024சென்னை, கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல், அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார