முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் கலப்பதில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல்

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : காவிரி ஆற்றில் கழிவுகள் கலக்கப்படுவது தொடர்பாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் இரண்டாவது அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், காவிரி ஆறு உற்பத்தியாகும் இடத்தில் கழிவு நீர் கலப்பதில்லை என்றும், காவிரியாறு பாயும் பகுதிகளிலேயே கழிவு நீர் கலப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், பெங்களுரு தொழிற்சாலைக் கழிவுகள் காவிரியில் கலப்பதாகவும் இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இந்த வழக்கு உச் சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு ஆணையம் இரண்டாவது அறிக்கையை தாக்கல் செய்தது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை மீது தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து