முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றம் நாளை கூடுகிறது : எதிர்க்கட்சிகள் முக்கிய ஆலோசனை

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் செயல்பட வேண்டிய விதம் குறித்து, டெல்லியில் எதிர்க்கட்சிகள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தின.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து டெல்லியில் மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மழைக்கால கூட்டத் தொடரின்போது எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து முடிவு செய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள்  ஆலோசனை நடத்தினர். வங்கிகளில் அதிகரித்துள்ள மோசடி, பெண்கள் பாதுகாப்பு விவகாரம், தேசிய பாதுகாப்புக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் போன்ற விவகாரங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து பதில்களை கோரும் வகையில் திட்டத்தை அவர்கள் தயாரித்துள்ளனர்.

மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த பி.ஜே. குரியனின் பதவிக்காலம் கடந்த 1ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அந்தப் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் உள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத்தின் இல்லத்தில் நேற்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள், பிற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து