முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக் பால், லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துங்கள் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: லோக் பால், லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

லோக் பால், லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகளை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

லோக் பால் அமைப்பதற்கான தேர்வுக் குழு கூட்டம் நாளை 19-ம் தேதி கூட உள்ளதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. நாளை தேர்வுக் குழு கூடி லோக்பால் ஏற்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்றும், லோக்பால் அமைக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் 23-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். மத்திய அரசின் அறிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட், வழக்கை 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து