முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்க தெலுங்குதேசம் முடிவு

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் வலியுறுத்த தெலுங்கு தேசம் கட்சி கட்சி முடிவு செய்துள்ளது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. இதில் மத்திய அரசுக்கு எதிராக தங்களின் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளின் ஆதரவை தெலுங்கு தேசம் திரட்டி வருகிறது. இதையொட்டி சென்னையில் தி.மு.க. எம்.பி. கனிமொழியை தெலுங்கு தேசம் எம்.பி.க்.கள் சந்தித்துப் பேசினர். இதுபோல் ஐதராபாத்தில் டி.ஆர்.எஸ். கட்சி எம்.பி. கே.கேசவராவை அவரது வீட்டில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் சந்தித்தனர்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

வரும் மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கப் போவதாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர். இதனால் மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து