முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்

புதன்கிழமை, 18 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

சியாங் ராய்: தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்.

பத்திரமாக மீட்பு....
தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் கடந்த மாதம் (ஜூன்) 23-ம் தேதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்பு பணி தொடங்கப்பட்டு கடும் சவால்களுக்கு மத்தியில் மூன்று கட்டங்களாக நடந்த மீட்பு பணியில் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

டிஸ்சார்ஜ் ஆனர்...
பசி மற்றும் உடல் சோர்வினால் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்கள் அனைவரும் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவர்களின் வீடியோவை தாய்லாந்து அரசு  வெளியிட்டது.  இந்நிலையில், சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உள்பட அனைவரும் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர் என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து