முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு சர்துல் தாகூர், முகமது ஷமி, ரிஷப் பந்த், குல்தீப் யாதவிற்கு இடம்

புதன்கிழமை, 18 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவித்து உள்ளது. இதில் சர்துல் தாகூர், முகமது ஷமி, ரிஷப் பந்த், குல்தீப் யாதவ் இடம் பெற்றுள்ளனர்.

சுற்றுப்பயணம்...
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் இழந்தது.

முதல் 3 டெஸ்ட்...
ஒருநாள் தொடர் முடிந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. செப்டம்பர் 11-ம் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது. இதில் முதல் 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்

வீரர்கள் விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல் ராகுல், எம்.விஜய், சதீஸ்வர் புஜ்ரா,  ரஹானே, கருண் நாயர், கார்த்திக், ரிஷப் பாண்ட், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், பாண்ட்யா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, ஷர்துல் தாகூர்

பும்ரா - முகமது ஷமி...
வேகப்பந்து வீரர் பும்ரா காயம் காரணமாக 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடரில் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிக்கு தேர்வாகி உள்ளார். முழு உடல் தகுதியுடன் இருப்பதால் முகமது ‌ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து