முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி சட்டசபைக்குள் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் புதுச்சேரி சட்டசபைக்குள் அனுமதிக்க சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களான சுவாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை சட்டசபைக்குள் அனுமதிக்குமாறு புதுச்சேரி சட்டசபை சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

மேலும், புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்ற ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்குத் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனைத்துத் தரப்புக்கும் உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணையை 3 வார காலத்துக்கு ஒத்திவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து