முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டிப்பிடித்த ராகுல் கைகொடுத்த மோடி பாராளுமன்றத்தில் பரபரப்பு

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: லோக் சபாவில் தனது உரையை முடிக்கும் முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை அவரது இருக்கைக்கு சென்று கட்டியணைத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் காங்கிரஸ் சார்பாக ராகுல் உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி சரமாரி விமர்சனம் செய்தார். தனது பேச்சின் நிறைவில் இந்தியா ஆபத்தான நிலையை அடைந்து இருக்கிறது என்றார்.

இந்த நிலையில் அவரது நேரம் முடிந்துவிட்டதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். இதையடுத்து, நான் நன்றாக பேசுவதாக பா.ஜ.க.வினர் என்னிடம் கூறினார்கள் என்று ராகுல் உரையை முடித்தார். தனது உரையை முடித்தவுடன் நேரடியாக பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டிப் பிடித்து சிரித்தார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் பிரதமர் மோடி ராகுலிடம் கைகொடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து