முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளியே சிரிப்பு - உள்ளே பதட்டம் மோடியை கிண்டல் செய்த ராகுல்

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: வெளியே சிரிப்பு, உள்ளே பதட்டத்துடன் மோடி உள்ளார் என்று பாராளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது ராகுல் கிண்டலாக தெரிவித்தார்.

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது ராகுல் பேசியதாவது,
ஒரே இரவில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தீர்கள். இதனால் சிறு, குறு முதலாளிகளும், விவசாயிகளும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர். வேலைவாய்ப்பை உருவாக்க இந்த அரசு என்ன செய்தது?

ரபேல் விமானம் வாங்கப்பட்டது குறித்து பாதுகாப்பு துறை விளக்கமளிக்கவில்லை. குஜராத் முதல்வராக இருந்த போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கடுமையாக எதிர்த்தீர்கள். தற்போது 5 விதமான வரிகள் விதிக்கப்படுகின்றன. இந்த அவையில் பிரதமர் சிரித்துக் கொண்டிருக்கிறார். அவர் வெளியே சிரித்துக் கொண்டிருந்த போதும், உள்ளே பதட்டமாகவே இருக்கிறார். பிரதமர் மோடி என் கண்களை பார்த்து பேச மறுக்கிறார். பிரதமர் மோடியும், சீன அதிபரும் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த போது சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறியது என்றார். இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து