முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மழை, வெள்ள நிவாரணத்துக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர்

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

கொச்சி: கேரளாவில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.80 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தலைமையிலான மத்தியக் குழுவினர் நேற்று காலை கொச்சி வந்து பின்னர் கேரளாவில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்த குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். வெள்ள நிலைமையை எதிர்கொள்ள மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து