முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கும் மகன் போன்றவர்தான் ராகுல்! தவறு செய்தால் கண்டிப்பது தாயின் கடமை: சுமித்ரா மகாஜன்

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: ராகுல் எனக்கும் மகன் போன்றவர்தான். எனவே அவர் தவறு செய்தால் அதை கண்டிப்பது தாயின் கடமை என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி, மோடியின் அருகே சென்று அவரைத் திடீரென கட்டி அணைத்தார். மோடியும் ராகுலை தட்டிக் கொடுத்தார். பின்னர் தனது இருக்கைக்கு வந்த ராகுல் காந்தி, மோடியை பார்த்து கண்ணடித்தார். இதைப் பார்த்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசுகையில்,

ராகுலின் செயல்பாடு எனக்குப் பிடிக்கவில்லை. இந்த அவையில் அமர்ந்திருப்பது நாட்டின் பிரதமர். அவருக்கென மரியாதை உண்டு. காங்கிரஸ் கட்சியினர் வேண்டுமானால் ராகுலின் செயல்பாடுகளை விரும்பியிருக்கலாம். ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை.

அதிலும் குறிப்பாக ராகுல் அமர்ந்த பின் கண்ணை சிமிட்டியது எனக்கு அதிருப்தியை அளிக்கிறது. சபையின் மாண்பைப் பராமரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். ராகுல் எனக்கு மகன் போன்றவர். பிள்ளைகள் தவறு செய்தால், அதை தட்டிக் கேட்டு, அவர்களை மெருகேற்ற வேண்டியது தாயின் கடமையாகும். அந்த முறையில் அவரை நான் கண்டிக்கிறேன் என்று சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து