முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சிறை கைதி

செவ்வாய்க்கிழமை, 31 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சிறையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி !
பரிதாபாத், உத்தர பிரதேசம், பரிதாபாத்தில் அருகேயுள்ள சிறையில் கைதி ஒருவன் கேக் வெட்டி தன் பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கொலைக் குற்றத்தில் கைதாகியுள்ள ரவுடி சிவேந்திர சிங். கடந்த 6 மாதங்களாக தண்டனை பெற்று வருபவர் இவர். கடந்த 23-ம் தேதி சிறையின் அறைக்கு வெளியே கேக் வெட்டி, சக கைதிகளுக்கு கொடுத்து தனது பிறந்தநாளை சிவேந்திரசிங் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். இந்த விடியோவை சிறைத்துறை அதிகாரி ஒருவர் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 28-ம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட சிவேந்த சிங்கிடம் சிறையில் பிறந்தநாள் கொண்டாடியது பற்றி விசாரித்தனர். அப்போது அவர் சிறை அதிகாரி வினய் குமார் சிறையில் எனது பிறந்த நாள் கொண்டாட ஏற்பாடு செய்திருந்ததாகவும், இதற்காக அவருக்கு ரூ.ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், சிறைக்கு மொபைல்போன் பயன்படுத்துவது உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர பணம் கொடுத்துள்ளேன் என்றும் ரவுடி சிவேந்திரா சிங் கூறியுள்ளார். இந்நிலையில் சிறைக்கைதி ஒருவர் கேக் வெட்டிக் கொண்டாடிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகச் சிறைத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளி என்று தீர்பளிக்கப்பட்ட ஒருவர் தன் தவறை நினைத்து திருந்தும் இடமாக சிறை இருக்கும் என்று நினைத்தால் இதுபோன்ற ஒரு சில அதிகாரிகள் கடமை தவறி குற்றவாளிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவுவதால் குற்றத்திற்கான தண்டனை குறித்த பயம் குற்றவாளிக்கு மட்டும் அல்ல, பொதுமக்களுக்கும் இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து