முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்மலாதேவியின் நீதிமன்ற காவல் 14-ம் தேதி வரை நீட்டிப்பு

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சாத்தூர் : பேராசிரியை நிர்மலா தேவியின் நீதிமன்ற காவலை வரும் 14-ம் தேதி வரை நீட்டித்து சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டதாக கூறி  கைதான வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி தன்னை ஜாமீனில் விடக் கோரி ஏழு முறை மனு தாக்கல் செய்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அவற்றை தள்ளுபடி செய்தது. இவர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீஸார்  கடந்த சில நாள்களுக்கு முன் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் நிர்மலா தேவியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில்  அவரை சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார்  மீண்டும் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி அவரை ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  இதே போல் உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் நீதிமன்ற காவலும் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து