எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் நேற்று மாலையில் இறுதிச் சடங்கு நடைபெற்று ஏ.கே. போஸ் எம்.எல்.ஏ.வின் உடல் கீரைத்துறை மூலக்கரை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
உடல் நிலை பாதிப்பு...
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் கடந்த 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஏ.கே.போஸ். இவரது வீடு மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரில் உள்ளது. இவர் சர்க்கரை நோய் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு போஸூக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் மதுரை எல்லீஸ்நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 69. இதைத்தொடர்ந்து அவரது உடல் ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மலர்வளையம்...
ஏ.கே.போஸூசின் மரணம் குறித்து கேள்விப்பட்டதும் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை விரைந்து வந்தனர். ஏ.கே.போஸூசின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஏ.கே.போஸூசின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க. பிரமுகர்களும், அனைத்து கட்சி பிரமுகர்களும் ஏ.கே. போஸ் இல்லத்திற்கு விரைந்து சென்று அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். ஏ.கே. போஸ் மறைவு செய்தி கேட்டு கட்சியினர் சோகமடைந்தனர். அவர்களும் அவரது இல்லத்திற்கு விரைந்து சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அஞ்சலி
இந்த நிலையில் ஏ.கே.போஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் விமானம் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று ஏ.கே.போஸின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முதல்வருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரசு கொறடா ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்டோரும் மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இறுதி சடங்கு...
பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் நேற்று மாலை இறுதி சடங்கு நடைபெற்றது. ஏ.கே.போஸின் உடல் அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மதுரை கீரைத்துறையில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அங்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. முன்னதாக ஏ.கே. போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்கலங்கியபடி நா தழுதழுக்க பேசினார். ஏ.கே. போஸின் தொண்டுகளை பற்றி அவர் விவரித்தார். ஏ.கே.போஸ் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை என்றும் அவர் கூறினார்.
நிர்வாகிகள் அஞ்சலி...
முன்னதாக அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், டாக்டர் விஜயபாஸ்கர், கே.டி.தங்கமணி, கே.பி.அன்பழகன், வெல்லமண்டி நடராஜன், பாலகிருஷ்ணாரெட்டி, வளர்மதி, ராஜலெட்சுமி, நிலோபர் கபில், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், நீதிபதி, பெரியபுள்ளான், மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.முத்துராமலிங்கம், கே.தமிழரசன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் மா.இளங்கோவன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய துணை செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் மலர் வளையம், மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
மரணமடைந்த ஏ.கே.போஸூசிற்கு மனைவி பாக்கியலெட்சுமி, மகன்கள் சிவசுப்பிரமணியன், சங்கர், மகள்கள் டாக்டர் ஜெயலட்சுமி தேவி, ஜெயகார்த்திகா ஆகியோர் உள்ளனர்.
வாழ்க்கை வரலாறு
ஏ.கே.போஸ் 1972 – ம் ஆண்டு முதல் கட்சி பணி ஆற்றி வந்தார். எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவராகவும், இணைச்செயலாளராகவும் பணியாற்றினார். கடந்த 2003 முதல் 2006 வரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். 2004–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க . வேட்பாளராக மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2006–ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011–ம் ஆண்டு மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து 2016–ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 3 - வது முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இந்த நிலையில் ஏ.கே.போஸ் மாரடைப்பால் மரணமடைந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.