எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலியின் சதத்தால் இந்திய அணி 274 ரன்கள் எடுத்தது.
285 ரன்கள்...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தொடக்க நாளில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் (80 ரன்), பேர்ஸ்டோ (70 ரன்) அரைசதம் அடித்தனர்.
அஸ்வின்...
இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நடந்தது. 2-வது ஓவரிலேயே முகமது ஷமியின் பந்து வீச்சில் சாம் குர்ரன் (24 ரன்) விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
முரளி விஜய்...
பின்னர் இந்திய அணியின் முதல் இன்னிங்சை முரளி விஜயும், ஷிகர் தவானும் மிகுந்த எச்சரிக்கையுடன் தொடங்கினர். இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்தை நன்கு ‘ஸ்விங்’ செய்து குடைச்சல் கொடுத்தனர். அவர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து ஆடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்த நிலையில் (13.4 ஓவர்) பிரிந்தது.
இடக்கை வேகப்பந்து வீச்சாளரான 20 வயது சாம் குர்ரனின் பந்து வீச்சில் முரளிவிஜய் (20 ரன், 45 பந்து, 4 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு ஓட விட்டார். அதே ஓவரில் அவரும் காலியானார். ஆப்-சைடுக்கு வெளியே சென்ற பந்தை அடித்த போது, அது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. லோகேஷ் ராகுல் 4 ரன்னுடன் நடையை கட்டினார்.
கார்த்திக் ஏமாற்றம்
அதைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி களம் புகுந்தார். மறுமுனையில் தட்டுத்தடுமாறிய ஷிகர் தவானுக்கும் (26 ரன், 46 பந்து, 3 பவுண்டரி) குர்ரன் ‘செக்’ வைத்தார். அவரது பந்தில் ஷிகர் தவான் ஸ்லிப்பில் நின்ற டேவிட் மலானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ரஹானே களம் இறங்கினார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 76 ரன்களுடன் பரிதவித்தது.
அணியின் ஸ்கோர் 27.4 ஓவர்களில் 100 ரன்னை எட்டிய போது ரஹானே (15 ரன், 34 பந்து, ஒரு பவுண்டரி) பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ஜென்னிங்சிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (0) வந்த வேகத்திலேயே பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் போல்டு ஆகி ஏமாற்றம் அளித்தார்.
பாண்ட்யா 22 ரன்
இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, கேப்டன் விராட்கோலியுடன் இணைந்தார். ஹர்திக் பாண்ட்யா ரன் கணக்கை தொடங்கும் முன்பே பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனதாக நடுவர் அவுட் கொடுத்தார். அப்பீல் செய்ததில் அவர் அவுட்டில் இருந்து தப்பினார். அடுத்த ஓவரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை விராட்கோலி அடித்து ஆட முயல அது எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்ற டேவிட் மலானை நோக்கி சென்றது. அவர் அந்த அருமையான கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டார். அப்போது விராட்கோலி 21 ரன்கள் எடுத்து இருந்தார். அடுத்த ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யா கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பி பிழைத்தார். இந்த முறை ஸ்லிப்பில் நின்ற அலஸ்டயர் குக் நல்ல கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார்.
ரன் கணக்கை தொடங்கும் முன்பே 2 முறை ‘அவுட்’ ஆபத்தில் இருந்து அதிர்ஷ்டவசத்தால் தப்பிய ஹர்திக் பாண்ட்யா அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. ஹர்திக் பாண்ட்யா 52 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 22 ரன் எடுத்த நிலையில் குர்ரன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார்.
விராட்கோலி சதம்
இதனை அடுத்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், கேப்டன் விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி 100 பந்துகளில் 9 பவுண்டரியுடன் அரை சதத்தை எட்டினார். தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து அஸ்வின் (10 ரன், 15 பந்து, 2 பவுண்டரி), முகமது ஷமி (2 ரன்) ஆகியோர் விக்கெட்டுகளை ஜேம்ஸ் ஆண்டர்சன் சாய்த்தார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா (5 ரன்) அடில் ரஷித் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து உமேஷ் யாதவ் களம் இறங்கினார்.
ஒரு புறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் கேப்டன் பொறுப்பை உணர்ந்து ஆடிய விராட்கோலி அணியை சரிவில் இருந்து மீட்டார். முதலில் சற்று தடுமாறியதுடன், கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பிய விராட்கோலியின் ஆட்டம் போகப்போக சூடுபிடித்தது. நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி, 65-வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் பவுண்டரி விரட்டி சதத்தை எட்டினார். அவர் 172 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 22-வது சதத்தை பூர்த்தி செய்தார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் விராட்கோலி அடித்த முதல் சதம் இதுவாகும். சதம் அடித்ததும் உரக்க சத்தமிட்ட விராட்கோலி தனது கழுத்தில் செயினில் அணிந்து இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை முத்தமிட்டு மகிழ்ந்தார்.
இந்திய அணி 274 ரன்
சதம் அடித்த பிறகும் விராட்கோலி தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். அடில் ரஷித் பந்து வீச்சில் ஷாட் பிட்ச் ஆகி வைடாக சென்ற பந்தை விராட்கோலி அடித்து ஆடினார். அது ஸ்டூவர்ட் பிராட் கையில் தஞ்சம் அடைந்தது. விராட்கோலி 225 பந்துகளில் 22 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 149 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 76 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. உமேஷ் யாதவ் 1 ரன்னுடன் (16 பந்துகளில்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
2-வது இன்னிங்ஸ்...
13 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி ஆட்ட நேரம் முடிவில் 3.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் 14 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்து வீச்சில் போல்டு ஆனார். ஜென்னிங்ஸ் 5 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.