முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்கண்டில் நடந்த தாக்குதல் குறித்து சிறப்பு விசாரணை - சுவாமி அக்னிவேஷ் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என சுவாமி அக்னிவேஷ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சுவாமி அக்னிவேஷ் ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டி வருமாறு:-

இச்சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆகியும் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. விசாரணையும் நடைபெறவில்லை. இதிலிருந்தே இச்சம்பவம் மூடி மறைக்கப்படுவதை எடுத்துக்காட்டுகிறது. இச்சம்பவத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று நான் உச்ச நீதிமன்றத்தை நாடுவதைத் தவிரவேறு வழியில்லை. இவ்வாறு அக்னிவேஷ் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 18 அன்று பாக்கூர் அருகே உள்ள லிட்புரா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அக்னிவேஷ் மீது பா.ஜ.க இளைஞர் அமைப்பினர் அவரை சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து