முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை தலைவராக பீகார் பெண் எம்.பி. பர்வீன் - பார்லி.யில் உறுப்பினர்கள் பாராட்டு

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது அவை நடவடிக்கைகளை முதல்முறை பெண் எம்.பி. ஒருவர் வழிநடத்திய சாதனை நிகழ்த்தப்பட்டது.
மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழுவில் பெண் உறுப்பினர் ஒருவருக்கு இடமளிக்க வேண்டும் என கடந்த மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தின்போது பெண் எம்.பி.க்கள் சிலர் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட வெங்கையா நாயுடு, பீகாரை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் பெண் எம்.பி. கஹகஷான் பர்வீனை மாநிலங்களவை துணைத் தலைவர்களில் ஒருவராக கடந்த 27-ம் தேதி நியமித்தார். முதல்முறை எம்.பி.யான இவர் கடந்த 2014-ல் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பூஜ்ய நேரத்துக்கு பிறகு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு, கேள்வி நேரத்துக்கு அவைக்கு பர்வீன் தலைமை வகிப்பார் என அறிவித்தார்.

இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கியபோது, அவைத் தலைவருக்கான இருக்கையில் பர்வீன் வந்து அமர்ந்த போது, அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பர்வீன் தனது பணியை மிகவும் நம்பிக்கையுடன் செய்ததாக வெங்கையா நாயுடு பின்னர் பாராட் டினார். 10 ஆண்டுகளில் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது முதல்முறை பெண் ஒருவர் அவைக்கு தலைமை வகித்தது இதுவே முதல்முறை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து