எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சிறு, குறு தொழில் துறையினர் தாமதமாக செலுத்தும் ஜி.எஸ்.டி வரிக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
29-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டம் புதுடில்லியில் நேற்று நடைபெற்றது,.இந்த கூட்டத்தில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், வணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலசந்திரன், கூடுதல் தலைமைச் செயலாளர், வணிகவரி ஆணையர் டி.வி.சோமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு காண்பதற்காக சிறப்பு மன்ற கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளை கண்டறியும் பொருட்டு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள் துறை அமைச்சர் பென்ஜமின் ஆகியோர் தலைமையில் கடந்த 26-ம் தேதி சென்னையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் அமலாக்கத்திற்கு பின்பு அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சில இடர்பாடுகள் மற்றும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் மேற்கொள்ளும் சேவைகள் மீது வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களிடமிருந்து வரப்பெற்ற அத்தனை கோரிக்கைகளும் துறை அளவில் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு கீழ்காணும் இனங்கள் மன்றத்தின் பரிசீலனைக்காக அமைச்சர் ஜெயக்குமார் கூட்டத்தில் முன்வைத்தார்.
இதில் குறிப்பிடத்தக்க கோரிக்கைகள் பின்வருமாறு:
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை தொடர்பான சில்லறை வேலைகள் மீது தற்போது 18 சதவீதம் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்படுவதால் அவர்களுடைய நடப்பு மூலதனமானது முடங்கி விடுகிறது. இந்த துறையைச் சார்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் சில்லறை வேலை தொடர்பான செலுத்தங்கள் மூன்று மாத இடைவேளைக்குப் பின்புதான் அவர்களுக்கு கிடைக்கப் பெறுகிறது. இந்நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை தொடர்பான சில்லரை வேலைகள் மீது ஜவுளி தொழில் தொடர்பான சில்லரை வேலை மீதான வரியினை குறைத்தது போன்று 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்திட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
ஜி.எஸ்.டி சட்டத்தின் கீழ் வரி செலுத்துவோருக்கு பயனளிக்கக் கூடிய வகையில் தற்போது இருந்து வரும் மாதாந்திர விவர அறிக்கை தாக்கல் செய்யும் முறையினை மேலும் எளிமைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விற்பனைத் தொகை 5 கோடிக்குள் உள்ள வரி செலுத்துவோர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விவர அறிக்கை தாக்கல் செய்வதற்கும், ஆனால் மாதந்தோறும் வரி செலுத்த வேண்டும் என்பதும் இந்த கருத்துருக்களில் ஒன்றாகும். இந்நேர்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையை சார்ந்தவர்களால் தாமதமாக செலுத்தப்படும் வரியின் மீதான வட்டியின் விகிதத்தை ரூ. 12-ஆக குறைத்திட வேண்டும். மேலும் மூன்று மாதத்திற்குள்ளாக தாமதமாக தாக்கல் செய்யப்படும் விவர அறிக்கை மீது விதிக்கப்படும் தாமத கட்டணத்தை(அபராதம்) தவிர்த்திட வேண்டும். ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட வேண்டிய விவர அறிக்கையானது பிறரை சார்ந்திராமல் சுயமாக தாக்கல் செய்திடும் வகையில் அதன் அமைப்பானது எளிமையாக வடிவமைக்கப்பட வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் ஏறத்தாழ 50 சதவீத அளவிற்கான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆகையால் இத்துறையை சார்ந்த ஏற்றுமதியாளர்களுக்கு தங்குதடையின்றி ரீபண்ட் வழங்கிட வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார். ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்கு பின், தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் அனைத்தும் அவ்வப்போது களையப்பட்டு வருகின்றன. இருப்பினும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினை சார்ந்தவர்களால் எதிர்கொள்ளப்படும் சில குறிப்பிட்ட தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டுமென கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
வாகனத் தயாரிப்பு தொழிலில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. வாகன உதிரிப் பொருட்கள் தயாரிப்புத் தொழிலில் பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் தொழில் உள்ளீடுகள் என்ற பெயரில் 5 சதவீதம் மட்டுமே வரி செலுத்தி வந்தனர். மேலும், இவர்கள் மத்திய கலால் வரி விதிப்பிற்கும் உட்படாமல் இருந்து வந்தனர். ஆனால் ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்குப் பின், உயர் வரி விகிதமான 28 சதவீதம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் இவர்களுடைய நடப்பு மூலதனமானது முடங்கி விடுகிறது. வாகன உதிரிப் பொருட்கள் என்பன தொழில் உள்ளீடுகள் என்பதனால் இவற்றின் மீதான 28 சதவீத வரி விதிப்பினை 18 சதவீதமாக குறைத்திட வேண்டுமென நேற்றைய கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை கிட்டத்தட்ட 6000 பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்த துறையால் உற்பத்தி செய்யப்படும் பல பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டு மற்றும் விலக்களிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியினை குறைப்பதற்கும் மற்றும் விலக்களிப்பதற்கும் தமிழ்நாடு தொடர்ந்து மன்றக் கூட்டங்களில் வலியுறுத்தி வருகிறது. அதனடிப்படையில், நேற்றைய கூட்டத்திலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினால் உற்பத்தி செய்யப்படும் கீழ்க்காணும் பொருட்கள் மீதான வரியினை குறைப்பதற்கு மற்றும் விலக்களிப்பதற்கு அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
கைத்தறி மற்றும் விசைத்தறி பொருட்கள், கொள்கலனில் அடைக்கப்பட்டு வணிகச் சின்னம் இடப்பட்ட அரிசி மற்றும் இதர உணவு தானியங்கள், ஜவ்வரிசி, தீப்பெட்டி, ஆட்டா சக்கிக்கு இணையாக கிரைண்டர் மீதான வரியினை நிர்ணயித்தல், ஊறுகாய், வெண்ணெய், நெய், விவசாயக் கருவிகள், ஜவுளித் தொழிலில் பயன்படும் இயந்திர பாகங்கள், பம்பு செட்டுகள், மீன்பிடி தொழிலுக்கான உபகரணங்கள், மரவள்ளிக் கிழங்கு ஸ்டார்ச், வணிக சின்னமிடப்படாத நொறுக்கு தீனிகள், பேக்கரி பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள்; பல்வேறு வகையான வத்தல்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய கருவிகள், பிஸ்கட்டுகள், உரம், நுண் ஊட்டச் சத்துகள், இயற்கை உரங்கள், பூச்சி கொல்லிகள் மற்றும் பூஞ்சை கொல்லிகள், கற்பூரம், காய்ந்த மிளகாய், வெந்தயம், தனியா, மஞ்சள் போன்றவை மற்றும் அதன் பொடிகள், சீயக்காய், கடித உறை, அட்டைகள், டயரிகள் பயிற்சி குறிப்பு மற்றும் கணக்கு புத்தகம் போன்ற காகிதப் பொருட்கள், பாலியஸ்டர் /நாரினால் ஆன நெய்யப்படாத பைகள், காதிப் பொருட்கள், கழிவு செய்யப்பட்ட டயர்கள், வெளுப்பதற்கான திரவம், பவானி தரைவிரிப்பு, கட்டுமானப் பொருட்கள், மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக், வேப்பம் பிண்ணாக்கு, அரிசி தவிடு மீது வரி விலக்கு அல்லது எதிரிடை கட்டணமாக மாற்றல், வெள்ளி மெட்டி, தாலி போன்றவை அலுமினிய பாத்திரங்கள் மற்றும் அலுமினிய கழிவுகள், பட்டு நூல் மற்றும் சரிகை, தேங்காய் நார் பொருட்கள், செங்கல் மீது இணக்க முறையில் வரி செலுத்துதல், இரப்பர் கலந்த நாரினால் செய்யப்பட்ட மெத்தைகள், பேக்கரியில் பயன்படும் ஈஸ்ட், மெல்லும் புகையிலை மற்றும் சுருட்டு, கொள்கலனில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், கொசு அழிப்பான்கள், மொறுமொறுப்பான ரொட்டித்துண்டு (ரஸ்க்), நன்னாரி சர்பத், பனஞ்சர்க்கரை, வறுத்த கடலை, காலர் துணி, கோவா மற்றும் பால்பேடா, சாம்பிராணி, பனைநார் மற்றும் மட்டைகள், கோரைப் பாய், பனை, தென்னை, பாக்கு, பேரிச்சம், வாழை போன்ற இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தட்டு, குவளை, தொன்னை, பானை போன்ற பொருட்கள், கைவினைப் பூட்டு, பயோ டீசல், சல்லா துணி மற்றும் கட்டு போடும் துணி, மெழுகுவர்த்திகள், சங்கு மற்றும் கடல் சிப்பியாலான கைவினைப் பொருட்கள், ரயில் வாகனம் மற்றும் பாகங்கள் வினியோகம் மீதான உள்ளீட்டு வரி வரவினை அனுமதித்தல், கையால் செய்யப்பட்ட இரும்பு பெட்டி, வாகன உதிரி பாகங்கள், ஐஸ்கீரிம் போன்ற குளிர் பானங்களையும் இணக்கமுறை வரிவிதிப்பில் எதிர்மறை பட்டியலில் சேர்த்தல். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு சேவைகள் மீதான வரியினை குறைப்பதற்கும் மற்றும் விலக்களிப்பதற்கும் நேற்றைய கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.