முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் ஒவ்வொரு ஊடுருவல் முயற்சியும் முறியடிக்கபடும்: நிர்மலா

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : எல்லையில் ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கர்நாடகா சென்ற அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வர் குமாரசாமியை சந்தித்தார். அதை தொடர்ந்து பெங்களூருவில் ராணுவ நிலத்தை பார்வையிட்ட பின் அவர் கூறியதாவது,

ஊடுருவலை தடுத்து, எல்லையை பாதுகாக்கவே நான் ராணுவ அமைச்சராக இருக்கிறேன். பாகிஸ்தானில் என்ன நடந்தாலும், எங்கள் நிலைப்பாடு மாறாது. எங்கள் பணியை எப்போதும்போல் செய்வோம். ஒவ்வொரு ஊடுருவல் முயற்சியும் முறியடிக்கப்படும். 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள விமான கண்காட்சியை எங்கு நடத்துவது என ராணுவத்துறை இறுதி முடிவு எடுக்கவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து