முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஷ்கரில் துப்பாக்கிச்சூடு : 14 மாவோயிஸ்டுகள் பலி

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

சுக்மா : சத்தீஷ்கர் மாநிலம், சுக்மா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரிலிருந்து 390 கி.மீ. தொலைவில் உள்ள சுக்மா மாவட்டத்தில் கொள்ளபள்ளி மற்றும் கொண்டா என்ற வனப்பகுதி உள்ளது. இது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். அதனால், சுக்மா மாவட்ட பாதுகாப்பு படையினரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நேற்று காலை சுக்மா மாவட்டம், கொள்ளபள்ளி மற்றும் கொண்டா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, அங்கே மறைந்திருந்த 200-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு சிறப்பு அதிரடி படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கூட்டாக சேர்ந்து தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 14 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் தேடி வருகின்றனர். இந்த முறை மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிராக புதிய தாக்குதல் உத்தியை பின்பற்றியதாகவும் அது வெற்றி பெற்றுள்ளது என்று மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து