முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு வரும் 9-ம் தேதி தேர்தல்: வெங்கையா நாயுடு

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும்  9-ம் தேதி நடைபெறும் என்று துணை ஜனாதிபதியும், அவைத் தலைவருமான வெங்கையா நாயுடு  அறிவித்துள்ளார்.

மேலும், மாநிலங்களவை துணை தலைவராக இருந்து வந்த குரியனின்  பதவிக் காலம் கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மாநிலங்களவை துணை தலைவர் பதவி காலியாக இருந்து வருகிறது. அதனால், மாநிலங்களவை  துணை தலைவர் பதவிக்கு வருகிற வரும்  9-ம் தேதி தேர்தல் நடைபெறும். 8-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வெங்கையா  நாயுடு அறிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ஜோசப் குரியன் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் ராஜ்ய சபாவின் துணை தலைவராக பதவி வகித்து வந்தார். இவருடைய பதவிக்காலம் கடந்த ஜூலை 1-ம் தேதி நிறைவடைந்தது. ஜோசப் குரியன் இதற்கு முன்பு 2 முறை லோக்சபா எம்.பி.யாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து