முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவை மிஞ்சும் இந்திய மக்கள் தொகை: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை - பார்லி.யில் பா.ஜ.க. வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 2022-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை மிஞ்சி விடும் என்பதால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் நேற்று எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்தில் பா.ஜ.க. எம்.பி. அசோக் பாஜ்வாய் பேசுகையில்,

இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2022-ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சி உலக அளவில் அதிக மக்கள் தொகை உள்ள நாடாக மாறி விடும். 2050-ம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை 166 கோடியாக அதிகரிக்கும்.

நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி மக்கள் தொகை உயர்ந்து வருகிறது. கடவுள் பெயரைக் கூறி குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தினார். இவருக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி. விஜய்பால் சிங் தோமரும் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து