எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலையில் காலமானார். இந்த செய்தியை அறிந்ததும் தி.மு.க. தொண்டர்களும், அவரது குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
ஒன்றரை வருடமாக ஓய்வு
வயது முதிர்வு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூலை மாதம் 27-ம் தேதி நள்ளிரவில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக இரவோடு இரவாக அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதையடுத்து கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
முக்கிய தலைவர்கள் சந்திப்பு
இதையடுத்து தமிழக தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். பிறகு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்து மருத்துவமனையில் கருணாநிதியை பார்த்தார். பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நேரில் பார்த்தார். வெங்கையா நாயுடுவும், ராகுலும் கருணாநிதியை நேரில் பார்த்த புகைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் 2 தினங்களுக்கு முன் சென்னை வந்து காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதி உடல் நலம் பற்றி விசாரித்தார். ஆனால் அவர் கருணாநிதியை நேரில் பார்த்த படம் மட்டும் வெளியாகவில்லை. இதனால் தொண்டர்கள் மத்தியில் அப்போதே சந்தேகம் எழுந்தது.
தொடர்ந்து பின்னடைவு
இதற்கிடையே கடந்த 2 நாட்களாக கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. அவரது கல்லீரலின் செயல்பாடு குறைந்த நிலையில் மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியும் தென்பட்டது. ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. இதனால் அவரது உடலில் செலுத்தப்பட்ட மருந்துகளும் மெதுவாகவே வேலை செய்தது. இதனால் கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை உரிய பலனை அளிக்காததால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.
சவாலாக உள்ளது..
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் ஒரு மருத்துவ அறிக்கையை வெளியிட்டார். அதில் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வயது மூப்பின் வரும் பிரச்சினைகளை கணக்கிடும் போது முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பராமரிப்பது சவாலாக உள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும் அடுத்த 24 மணி நேரத்துக்குப் பிறகுதான் எதையும் தீர்மானிக்க முடியும் என்று அதில் மருத்துவர் குறிப்பிட்டிருந்தார்.
தயாளு அம்மாள் வருகை
இந்த செய்தி பரவியதும் தி.மு.க. வினர் மீண்டும் காவேரி மருத்துவமனை முன்பு திரளாக திரண்டனர். மிகுந்த சோகத்துடன் அவர்கள் காணப்பட்டனர். மு.க. ஸ்டாலின், கனிமொழி, அழகிரி ஆகியோரும் இவர்களுக்கு முன்பாக தயாளு அம்மாளும் மருத்துவமனைக்கு வந்து சென்றனர். தி.மு.க எம்.எல்.ஏ.க்களும் மருத்துவமனைக்கு வந்தார்கள். கூட்டணி கட்சித் தலைவர்களும் வந்து சென்றனர். கருணாநிதியை பார்ப்பதற்காக மதியம் 1.45 மணிக்கு அவரது மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையின் பின்புற வாயில் வழியாக சக்கர நாற்காலியில் அமரவைத்தபடி தயாளு அம்மாள் உள்ளே அழைத்து செல்லப்பட்டார். பின்னர் 20 நிமிடம் கழித்து அவர் கோபாலபுரம் புறப்பட்டு சென்றார். நேற்று முன்தினம் இரவு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.
உடல்நிலை தொடர்ந்து மோசம்
காவேரி மருத்துவமனை சார்பாக நேற்று முன்தினம் வரை 5 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் நான்கு அறிக்கைகள் சாதகமாக இருந்த நிலையில் 5-வதாக வெளியிடப்பட்ட அறிக்கையில்தான் கருணாநிதி கவலைக்கிடம் என்ற செய்தி வெளியானது. நேற்று மாலை 4.30 மணியளவில் மற்றொரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. கடந்த சில மணி நேரங்களாகவே அவரது உடல் உறுப்புகள் மோசமாகி விட்டதாகவும், இதனால் அவரது உடல்நிலை தொடர்ந்து மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதும் மருத்துவமனை முன்பு கூடியி்ருந்த தொண்டர்கள் கதறி அழுதனர். கருணாநிதி குடும்பத்தினர் குறிப்பாக பெண்கள் ஒவ்வொருவரும் கோபாலபுரம் வந்தனர். கருணாநிதியின் மகள் செல்வி கதறி அழுதபடி கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார்.
முதல்வருடன் ஸ்டாலின் சந்திப்பு
காவேரி மருத்துவமனை அறிக்கை வெளிவருவதற்கு முன்பு மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது கனிமொழி, அழகிரி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். இதையடுத்து மாவட்டங்களில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு போலீசாருக்கு டி.ஜி.பி. அவசர உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை 6.10 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானார் என்ற செய்தி அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு
முத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் என்று தனது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்பட்ட முத்துவேல் கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணா மூர்த்தி. இவர், நாகப்பட்டினம் மாவட்டம் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளையில் முத்துவேலர், அஞ்சுகம் அம்மையாருக்கு ஜூன் 3-ம் தேதி, 1924-ம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.
இளம் வயதிலேயே தம்மை சமூக இயக்கங்களில் இணைத்துக் கொண்ட கருணாநிதி, நீதிக் கட்சியில் இணைந்து, அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் தீவிரம் காட்டினார். தமிழ்நாட்டில் திராவிட இயக்க மாணவர் அணியை முதன்முதலாகத் தொடங்கியவரும் இவர்தான்.
தாம் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் கருணாநிதி. 1957-ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வென்று முதன்முறையாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். அப்போதிருந்து இன்று வரை சட்டமன்ற உறுப்பினாராக நீடிக்கிறார். தி.மு.க. துவக்கப்பட்டதிலிருந்து அக்கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வரும் கருணாநிதி, தி.மு.க. தலைவராக ஐம்பதாவது ஆண்டிலும் அடியெடுத்து வைத்து விட்டார்.
இதுமட்டுமல்லாது தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர். அண்ணா மறைவுக்குப் பின்னர் 1969-ல் முதல்முறையாக முதலமைச்சரானார். அப்பதவியில் 1971-ம் ஆண்டு வரை நீடித்தார். தொடர்ந்து 1971 முதல் 1976 வரை 2-வது முறையும், 89 முதல் 91 வரை மூன்றாவது முறையும், 1996 முதல் 2001 வரை நான்காவது முறையும், 2006 முதல் 2011 வரை ஐந்தாவது முறையும் முதலமைச்சராக இருந்தார்.
எம்.ஆர். ராதா அளித்த கலைஞர் பட்டம்
அரசியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு கருணாநிதிக்கு இன்னொரு முகமும் உண்டு. கலை, இலக்கிய துறைகளில் இடையறாத எழுத்துப்பணி, அவரை ஒரு படைப்பாளியாக உலகம் அடையாளம் கண்டுகொள்ள உதவியது. தூக்குமேடை நாடகத்தின் போது எம்ஆர் ராதா, கருணாநிதிக்கு அளித்த கலைஞர் என்ற பட்டம் இந்நாள் வரைக்கும் அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகிறது.
கனல் பறக்கும் வசனங்களை எழுதியவர்
கருணாநிதி அரசியல் துறையில் மட்டுமல்ல, சினிமா துறையிலும் கொடிகட்டி பறந்தவர். பராசக்தி படத்தில் அவர் எழுதிய கனல் பறக்கும் வசனங்களை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. குறிப்பாக, ஓடினாள், ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்ற அவரது வசனம் இன்று கேட்டாலும் நம்மை மெய்மறக்க செய்யும். அடுத்து மனோகரா படத்தில் அவர் எழுதிய வசனம் உலகப் புகழ் பெற்றது. பூம்புகார் படத்தில் கண்ணகியாக நடித்த விஜயகுமாரி பேசும் கனல் பறக்கும் வசனங்களை யாரும் மறக்க முடியாது. எம்.ஜி.ஆர். நடித்த மலைக்கள்ளன் படத்திற்கு வசனம் எழுதியதும் கருணாநிதிதான்.
கவிஞரும் கூட...
அவர் வசனகர்த்தா மட்டுமல்ல, சிறந்த கவிஞரும் கூட. பல்வேறு திரைப்படங்களில் அவர் பாடல்களை எழுதியிருக்கிறார். இலக்கிய நடையில் அவர் பேசும் பேச்சுக்களை கட்சியினர் ரசித்து கேட்பார்கள். இப்படி பன்முக திறமை கொண்டவர் கருணாநிதி. அவரது இழப்பு திரையுலகிற்கு மட்டுமல்ல, அனைத்து துறைக்கும் இழப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.