முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவ்வாயில் மனிதர்கள் குடியேறவே முடியாது - நாசா பரபரப்பு அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க் : செவ்வாயில் மனிதர்கள் எந்த காலத்திலும் குடியேற முடியாது என்று நாசா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

நாசா, ஸ்பேஸ் எக்ஸ், இஸ்ரோ போன்ற அமைப்பினர் எல்லோரும் செவ்வாயில் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், செவ்வாயில் மனிதர்கள் வசிக்க முடியாது என்று நாசா அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதவாது அங்கு மனிதர்கள் எந்த விதமான அறிவியல் கருவியை வைத்தும் குடியேற முடியாது என்று கூறியுள்ளது. வேண்டுமென்றால் உணவுப்பொருளோடு சென்று சில நாட்கள் இருந்து விட்டு வரலாம். ஆனால் அங்கு மனிதர்கள் நிரந்தரமாக வசிக்க முடியாது என்றுள்ளது.
அதே போல் செவ்வாயில் உயிரினம் எதாவது இருக்கிறதா என்பது குறித்தும் அதில் கூறியுள்ளது. அதன்படி செவ்வாயில் பிறந்து, அங்கேயே வளர்ந்த உயிரினம் அங்கே இருக்க வாய்ப்புள்ளது. இல்லாமல் போகவும் வாய்ப்புள்ளது. ஆனால் அங்கே உயிரினம் இருந்தாலும் இல்லாமல் போனாலும், எந்நாளும் மனிதர்களால் அங்கு வாழவே முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து